வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, November 8, 2016

என்றும் என்னவள் என்னுள்


என்னவளைப் பற்றி
கவிதையெழுதிட
வேண்டுமென்று
நீண்ட நாட்களாய்
ஆசை.........

முயன்றேன் முயன்றேன்
பல நாட்களாக
பல மாதங்களாக
பலமுறை பேனா எடுத்தும்
என்னவளை எழுத்துக்களில்
அடக்க முடியவில்லை!!!
அவளை நினைத்து
எழுதினாலும்
எழுதிய வார்த்தைகள்
அவளுக்கு
நிறைவாக வில்லை!!!
அவளை
பார்த்து ரசித்து
எழுதிட முயன்றாலும்
எழுத்துக்களெல்லாம்
அழகா கின்றது
ஆனால் அதில்
என்னவள் இல்லை!!!!
இயற்கையோடு
ஒப்பிடலாம் என்றாலும்
இயற்கை அன்னையும்
ஒத்துழைக்கவில்லை
என்னவளோடு ஒப்பிடுவதற்கு!!!!


கருமேகத்தோடு
அவள் கருங்கூந்தலை
ஒப்பிடலாம் என்றவுடன்
வெட்கத்தால் மேகமும்
மூடி கொண்டது!!!!
வேறு கிரகங்களில்
எல்லாம் தேடினேன்
என்னவளை பற்றி எழுதிட
ஆனாலும் வெறுமையும்
தேடலும் தான்
அதிகமானது!!!!
எனக்குள் நானே
கேட்டு பார்த்தேன்
விடை அறிந்தேன்
ஒரு நாள்!!
"இருதயத்திற்கு
வெளியில்
இருப்பவற்றை பற்றி
கவிதை எழுதிடலாம்
கட்டுரை எழுதிடலாம்
வர்ணித்தும் எழுதிடலாம்
இயற்கையோடும் ஒப்பிடலாம்
ஆனால் ஆனால்
.
.
.
இருதயத்திற்குள் துடிப்பாய்
இருப்பவளைப் பற்றி
எப்படி எழுதிட முடியும்
என்றான் என்
மனச்சாட்சி.....ஆம்
என்னவள் என்னுள்
நானாய் துடிக்கின்றாள்
எனக்காக என்னோடு
நினைவுகளோடு!!!!!

No comments:

Post a Comment