வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, November 11, 2016

மனமே மனமே

மனமே மனமே
தடுமாறும் மனமே
படைத்தவன் மீது
நம்பிக்கை கொண்டால்
படைப்புகளை ஏன்
நம்பிட வேண்டும்
ஏன் இழந்திட வேண்டும்???

படைப்புகளை அல்ல
படைத்தவனை நம்பிடு
அவனின் படைப்புகளை
அவனே நம்புவதில்லை
நீயேன் நம்புகின்றாய்?????

நம்புவதும்
எதிர்பார்ப்பதும்
நம்பிநம்பி
இழப்பதும்
எதிர்பார்த்து
ஏமாறுவதும்
பழக்கப்பட்ட ஒன்றா உனக்கு?????



சொல் அழகிலும்
வார்த்தை ஜாலங்களிலும்
படைப்புகளை நம்பிவிடாதே
உதடுகளின் கோலம்
உள்ளத்தின் அலங்கோலத்தை
மறைத்திடவே

மாற்றம் ஒன்றே
மாறாதவை தான்
ஆனால் மாற்றம்
எப்போது என்று
தெரிந்துவிட்டால்
மனதில் அமைதி நிலவுமே!!!!

No comments:

Post a Comment