வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

டிசம்பர் 23 : தேசிய விவசாயிகள் தினம்

டிசம்பர் 23 : இன்று தேசிய விவசாயிகள் தினம்!


மறைந்த இந்திய பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இருக்கிறது. இதில், 51 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடிப்பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





இன்றைய காலகட்டத்தில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. ஏனெனில், விளை நிலங்கள் அனைத்தும் வீடு கட்டுவதற்கு பிளாட்டுகளாக மாறி வருகிறது. அதனால், எதிர்கால தலைமுறைகளை கருத்தில்கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்களிடையே விவசாயத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் நடந்த தற்கொலையில், 62 சதவிகித விவசாயிகளும், 2010ஆம் ஆண்டில் நடந்த தற்கொலையில் 66.49 சதவிகித விவசாயிகள் என்று, தேசிய குற்றப் பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



நாட்டில் விவசாய தினம் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் விவசாயத்துக்கோ, விவசாயிக்கோ எந்தவொரு முன்னுரிமையும் எதிர்காலமும் இல்லாமல் இருக்கின்றனர் என்பது விவசாய நாடான இந்தியாவிற்கே அவமானமான ஒன்று..

எங்கள் கரங்களை சோற்றில் வைத்திட, தங்கள் கால்களை சேற்றில் வைத்து, நேரங்காலம் பார்க்காது உழைத்திடும் என் விவசாயி உறவுகளின் பாதம் தொட்டு சொல்கின்றேன் "விவசாயிகள் தின" வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment