வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

முற்றுப்புள்ளியை சிந்திக்காதே.....

மரணமே
முடிவென்று
வாழ்ந்தோ மென்றால்
வாழ்நாளின்
ஒவ்வொரு
நிமிடங்களும்
நரகமே!!
பிரிவு
உண்டென்று
நட்புக் கொண்டால்
பழகிடும்
ஒவ்வொரு
நாட்களும்
பொய்யானதே!!!!
காதலிக்க
ஆரம்பிக்கும் பொழுதே
முடிவினை
யோசித்தால்
அக்காதலும்
சுவையற்ற உணவாகுமே!!




முற்றுப்புள்ளி
உண்டென்று
எழுத தொடங்கினால்
ஒவ்வொரு
எழுத்துக்களும்
உயிரற்றதே!!!!

                                      

தொடக்கமும்
முடிவும்
நம் கைகளில் இல்லை

ஆனால்
இடைப்பட்ட
பயணம்
இன்பமாகவா அல்லது
துன்பமாகவா
என்பது
நம்மனப் பார்வையிலே!!

No comments:

Post a Comment