வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

மாற்றங்களில்லாத வாழ்வு............

டிசம்பர் 23: தேசிய விவசாயிகள் தினம்


மாற்றங்கள் மாற்றங்கள்
மாற்றங்களில்லாத
வாழ்வு என்றென்றும்
அரசு மட்டுமல்ல
இயற்கையும்
புறக்கணித்திடும் வாழ்வு!!!!

                                    



கோடிக்கணக்கில்
கடன் இருந்தும்
வளமான வாழ்வு
தொழிலதிபர்களாய்
ஆனால் நாங்கள்பிறரை வாழ்விக்க
கடனாளிகளாய்!!!!!







மண்ணை நேசித்து
மண்ணிலே உழைக்கின்ற
எங்கள் வாழ்வும்
மண்ணாய் இருக்கின்றதே!!!!!
வேற்று கிரகத்தில்
ஆய்வு செய்திட்டாலும்
இப்புவியில் வசிக்கும்
எங்களை வாழ்விக்க
ஆய்வு யாரும்
செய்ய வில்லையே!!!!!

                           
உழைத்து உழைத்து
தேயவில்லை நாங்கள்
உழைத்தும் எங்களுக்கு
பயனில்லையே
என்றெண்ணியே நினைத்து
ஓடாய் போனோம்.........
                           
நாங்கள்
ஆடம்பர வாழ்வு
வாழ்ந்திட கேட்கவில்லை!!!
உங்களின் பசியாற்றிடவே
எங்களின் வாழ்க்கையை
காத்திட வேண்டுகின்றோம்!!!!
                          
ஆட்சிகள் மாறினாலும்
கட்சிகள் மாறினாலும்
தலைமை மாறினாலும்
எங்கள் நிலைமை மட்டும்
மாறிடவே யில்லை!!!!

No comments:

Post a Comment