வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, December 28, 2016

நான் "கவிஞர்" ஆகிட்டேன்.......................

முகநூலில் "செய்யுட் கலை சூடிகை" https://www.facebook.com/groups/1563509013958081/ எனும் குழுமத்தில் 27.12.216  அன்று இணைந்து, அன்றைய தேதியில் நடந்த
  "தேவதையை கண்டேன்" எனும் தலைப்பில் எழுதிய கவிதை அக்குழுமத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவிஞர் எனும் அடைமொழியுடன் பாராட்டப்பட்டது..


அக்கவிதை :          " தேவதையை கண்டேன்"

காலை நேரத்தில்
சாலை ஓரத்தினில்
பாதந்தொட்டும் தொடாமலும்
நடந்து சென்றாள்!!!

கருங்கூந்தலில் இருந்து
சிதறிடும் நீர்த்துளிகள்
ஓவியமாய் சாலையில்

தொட்டவுடன் இழுத்திடும்
மின்சாரமாய் அவள்
விழிகளை கண்டவுடன்
இதயத்தை இழுத்து கொண்டாள்
தன்னுடனே!!!

மண்ணும் இரும்பும்
கலந்திருந்தாலும்
இரும்பினை
கவர்ந்திழுக்கும்
காந்தம் போல்
என் மனதினை
கவர்ந்திழுத்தாள்
அவளுக்காக
அவளோடு வாழ்வதற்காக

ஆம் இப்போது தான்
உணர்கின்றேன்
சில தேவதைகளால்
பூமியிலும் வாழ முடியுமென்று

என்னைப் பார்த்த
நொடிப்பார்வையில்
எனக்குள் ஒளிந்துக்கொண்டேனே
காதல் உலகத்தில்

மணி நேரங்கள்
பேச வேண்டியதையெல்லாம்
புரிந்துக் கொண்டேன்
நின் ஒற்றை பார்வையாலே

No comments:

Post a Comment