வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 30, 2016

ஐயோ..........ஐயகோ...

ஐயோ ஐயோ
என் இந்திய திருநாட்டிலா
இந்தவொரு இழிநிலை
விவசாய நாடு
என்றழைத்த
இந்திய தேசத்திலா
இந்த கொடுமை
பார்க்கும் போதே
மனம் பதறுகின்றதே
உயிர் சுமையாகின்றதே!
                                             
தனிமனிதன் ஒருவனுக்கு
உணவில்லையேல் இச்ஜெகத்தினை
அழித்திடுவோம் என்றான்
மீசைப்புலவன் பாரதி
ஆனால் இன்றோ
உலகிற்கெல்லாம்
உணவளித்த
எம் விவசாயிகள்
வாயில் எலிகளை
சுமந்து போராடுகின்றனர்
விவசாயத்தை காத்திட!!
                                        
கொடுமை கொடுமை
இதை காணும் போதே
என்னிதயத்தில்
செங்குருதி வடிகின்றதே
மனிதா மனிதா
நீ உணர்வுள்ளவனென்றால்
இன்றே சிந்தித்திடு
இன்ியும் காலமில்லை
இனியும் நேரமில்லை
வாடிய பயிர்களை
கண்ட போதெல்லாம்
மனம் வாடினார்
முன்னோர் வள்ளலார்
ஆனால் நேற்று
தாங்கள் பிறப்பித்த
நெற் பயிர்கள்
பிறந்து வாழ வழியில்லாது
வாடிய கதிர்களை கண்டு
தங்கள் உயிர்களையே
மாய்த்துக் கொண்டனர்

                               

இறைவா இறைவா
ஏன் இந்த சோதனை
எங்கள் விவசாயிகளுக்கு
அரசிற்கும் கட்சிகளுக்கும்
தான் இரக்கம் இல்லை
உமக்கும் இரக்கம் இல்லையா
எம் விவசாயிகளின் மீது
ஐயோ ஐயோ
விவசாயிகளின் தற்கொலையும்
விவசாயத்தின் அழிவும்
நாட்டிற்கே அழிவு என்பதை
என்று உணர்வீர்களோ?????????????





No comments:

Post a Comment