வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, December 23, 2016

என்னவளிடம் கேளுங்கள்

மலர்களே மலர்களே
மாலையிலும்
வாடாதிருப்பது
எப்படி யென்று
வாடா மலர்
அவளிடம்
கேட்டுக் கொள்ளுங்கள்!!!

வெண்ணிலவே வெண்ணிலவே
தேயாமல் மாறாமல்
அழகாயிருப்பது
எப்படி யென்று
என் நிலவிடம்
கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள்.........



ஆதவனே ஆதவனே
கோபத்திலும்
சுட்டெரிக்காமல் இருப்பது
எப்படி யென்று
என்னவளிடம்
கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள்.....

No comments:

Post a Comment