வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

நான் உன்னுள்

உன்னோடு
என்னுதடுகள் பேசவில்லை
ஆனால்
தினந்தோறும் தொடர்ந்து
பேசுகின்றேன்
என் விழிகளினால்
உன்னை ரசித்தப்படியே





என் பார்வை
அம்புகள் தொடர்ச்சியாக
உன்மீது ஆனால் நீயோ
அவற்றை
திசை மாற்றி விடுகின்றாய்
உன் ஒரே
முறைப்பில்
தோற்று தோற்று
போகின்ற பார்வைகளே
நிலையான நினைவுகளாய்
என் நெஞ்சினில்
வடுக்களாய்
அமர்ந்துவிட்டதடி!!!!!!
உன் விழிகள்
என்னை நோக்கியே
உன் செவிகளில்
எங்குரல் மட்டுமே
உன் இதயத்தில்
துடிப்பாய் நான் மட்டுமே
இருந்திடவே விரும்பிடும்
அன்பாய் நான் உன்னுள்

No comments:

Post a Comment