வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, December 20, 2016

லவ் லெட்டர்

பார்வைகளிலே
விழுங்கி விழுங்கி
தெருக்களின்
ஓரத்திலெல்லாம் தரிசித்து
பல  நிமிடங்களுக்கு பின்
கடிதம்
தந்திட்டான் தைரியமாய்!!!!

அவன்விரல் தீண்டிய
காகிதம் என்விரல்களில்
அடைப்பட்டப் பொழுதோ
எரிதனலாய் கொதித்ததே
அவன் இதயத்துடிப்பை
எழுதியிருப்பானோ!!!!

கடிதத்தின் மேல்பாகம்
வெள்ளையாய் தெரிந்ததே
அவனி்ன் மனம்
வெள்ளையென்பதை
உணர்த்து கின்றானோ!!!!!!


கடிதத்தினில்
கவிதை எழுதியிருப்பானோ
அல்லது என்னை
ஓவியமாய் தீட்டியிருப்பானோ
ஒன்னுமே புரியலையே

                             


பார்த்தேன் ரசித்தேன்
அனைத்தேன் பிரித்தேன்
அவன் தந்த
கடிதத்தை புன்னகையுடன்.......

அவன் இதயத்துள்
நானிருப்பதை அறிந்திடும்
ஆவலில் தரையினில்
கால்கள் இல்லாமல்
பறந்துக் கொண்டே.......

காகித ஓரங்களில்
அவன் சரீரத்தின்
வியர்வை துளிகள்
திட்டு திட்டாய்!!!!

மடிப்புகளை களைந்து
திறந்து விட்டேன்
என்னை ரசித்தவன்
கொடுத்த கடிதத்தை

படித்தவுடன்
என்னிதயமே
நின்று விட்டதோ
போன்ற எண்ணம்
"என்னுடம் படிக்கும்
அவள் தங்கச்சிக்கு
வீட்டில் தந்த
விடுப்பு கடிதம்" அது

No comments:

Post a Comment