வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, December 8, 2016

குடும்பமெனும் தோட்டம்

காலையில் பூத்திடும்
மலரின் மணம்
மாலையில் வாடிவிடும்
குடும்பமெனும் உறவில்
மனம் எனும் மலர்
எப்பொழுதும் வாடாமல்
காத்திடுவதே அன்பு!!!!!
குடும்பமெனும் உறவு
தாலி கயிற்றிலும்
மோதிரத்திலும்
மட்டும் இணைவது அல்ல!!!
மனங்களின் முடிச்சிலும்
அன்பின் இணைப்பிலும்
உருவாகிட வேண்டும்!!!!
திருமணம் என்பது
இருமனதின் சங்கமம்
குடும்பமெனும் உறவுக்கு
தினந்தோறும்
அன்பு எனும்
உயிரேற்றி
காதலெனும் ஆதவனை
உதித்திட செய்திட வேண்டும்!!!!


குடும்பமெனும் உறவில்
"பெற்றோர்" எனும்
தகுதிக்கும் அன்பே
பிரதானம்!!!!
வளத்தில் நலத்தில்
குறைகள் இருந்தாலும்
அன்பில் குறை கூடாது!!!!



காத்திடுவோம்
குடும்ப மெனும்
தோட்டத்தை
அன்பெனும் மலர்களால்
பூந்தோட்டமாக
வாழ்வின் இறுதி வரை.............

No comments:

Post a Comment